கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி கிடைந்தாகவும், சுகாதரமற்ற முறையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுபாஷ் சுந்தரம் என்ற இளைஞர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருபவர் சுபாஷ் சுந்தரம். இவர் இன்று பிற்பகல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார். சாப்பிடுவதற்கு தயிர் சேமியா ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு கொடுக்கபட்ட தயிர்சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் இது குறித்து நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.



மேலும், அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் கோவை பந்தய சாலையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், தயிர் சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்ததும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஏற்கனவே இதே போன்று ஓரு முறை இந்த ஹோட்டலில் சாப்பிட வந்த போது சாப்பாட்டில் பூச்சி இருந்தாக கூறினார். தொடர்ச்சியாக சுகாதரமற்ற முறையில் உணவில் பூச்சிகள் இருப்பதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார். கோவையில் இயங்கி வரும் இந்த பிரபல ஹோட்டலுக்கு 10க்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...