தொழிலாளர் நலத்துறையின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கணினி செயலி அறிமுகம்

கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கணினி செயலி வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் மூலம் இன்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு செயலி வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு ராஜவீதி துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நல துணை ஆணையர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்சியல் துணை ஆணையர் தெரிவித்ததாவது:-

காலத்திற்கேற்றவாறு நுகர்வோர்களின் பாதுகாப்பை விருத்தி செய்கின்ற வகையில் அதிகபட்ச சில்லரை விலையைவிட அதிகவிலையில் விற்க்கப்படும் பொருட்கள் மற்றும் எடையளவுகள் குறித்து புகார் தெரிவிக்க செயலிகளை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் முத்திரையிடப்படாத எடை அளவுகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் தாங்கள் வாங்கும் பொட்டல பொருட்களின் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர் பெயர், முகவரி, நிகர எடை, பொட்டலமிடப்பட்ட மாதம் மற்றும் வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை இவற்றில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் தொழிலாளர்துறையின் மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள TN-LMCTS எனும் Mobile App மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம். கூகுல் இணையத்தில் பிளே ஸ்டோரில் சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நுகர்வோர்கள் எளிதில் புகார் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாவட்ட தொழிலாளர் துறை ஆய்வர்களிடமோ, சரக ஆய்வாளர்களிடமோ புகார் தெரிவிக்கலாம். 

நுகர்வோரிடமிருந்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது மேற்கண்ட குறைகள் தொடர்பாக புகார்கள் பெறப்படின் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சட்டமுறை எடையளவு  சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே கோவை மாவட்டத்தில் உள்ள நுகர்வோர்கள் சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் தொடர்பான புகார்களை மேற்படி TN-LMCTS எனும் கணினி செயலி பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம். அதற்கான உடனடி நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் இச்செயலி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழச்சியில் தொழிலாளர் ஆய்வாளர் முருகேசன் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...