கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி துவக்கம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு முழுவதும் வருடந்தோறும் அனைத்து மத, சமூக மக்களோடு இணைந்து நோன்பு துறக்கும் நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றது. சமூக நல்லிணக்கம் வலுப்பட நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். கோவையிலும் இப்படிப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர கிளை நடத்தி வருகிறது.



அதனடிப்படையில் கடந்த ஞாயிறன்று கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் இஹ்சானில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.எஸ்.உமர் ஃபாரூக் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல் எதற்காக என்பது குறித்தும் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் தொழுகையை பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து நோன்பு துறந்தனர்.



இதனைத் தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டத் தலைவர் ஜனாப்.கே.ஏ.செய்யது இப்ராஹீம் தலைமையுரையாற்றினார். பின்னர், நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர் சென்னை புதுக்கல்லூரி வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர்.ஃபரீத் அஸ்லம் சிறப்புரையாற்றினார். நோன்பு எப்படிப்பட்ட தனிமனித மற்றும் சமூகத்தை உருவாக்க விரும்புகின்றது என்பது பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். மேலும், சமூக நல்லிணக்கம் தமிழகத்தின் அடையாளம் என்றும், அதனை வலுப்படுத்துவதில் நாம் ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



இந்நிகழ்வில் பெண்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...