சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை- கோவையில் முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் நிதி நிறுவனம் நடத்தி 3.65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு மேட்டூர் காவேரி பைனான்ஸ், அன்னை காவேரி பைனான்ஸ், ஸ்ரீ காவேரி பைனான்ஸ் என்ற  மூன்று நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. மேட்டூரை சேர்ந்த பார்த்திபன், சிவக்குமார், கனகராஜ் ஆகியோர் தங்களது உறவினர்களை இயக்குனர்களாக இணைத்துக்கொண்டு இந்த நிதிநிறுவனங்களை நடத்தி வந்தனர். 

இதனிடையே, கடந்த 2005 முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிக வட்டி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டோரிடம் 3.65 கோடி ரூபாய் இந்த நிதி நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மணி என்பவர் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களின் மீதும், 24 இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 முதல் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே ரங்கசாமி என்ற இயக்குனர் உயிரிழத்தார். 

இந்நிலையில் திங்களன்று (ஜூன் 19) இந்த வழக்கில் முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்ற நீதிபதி பாபு தீர்ப்பு வழங்கினார். இதில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கும் தலா 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தார். மேலும், 23 இயக்குனர்களுக்கும், 3 நிதி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 44 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பினை வழங்கினார். மேலும், அபராதத் தொகையினை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கவும் தனது தீர்ப்பில் நீதிபதி பாபு உத்திரவிட்டார்.

இதனையடுத்து 23 நிதி நிறுவன இயக்குனர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 23 பேரில் பெரும்பாலான  இயக்குனர்கள் 60 வயதை கடந்த மூத்த குடிமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தீர்ப்பு, மோசடியில் ஈடுபடும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு பாடமாக அமையும் என அரசு வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...