பாதுகாக்கப்படுமா குமிட்டிபதி குகை ஓவியங்கள் ?

‘தமிழர் என்றொரு இனமுண்டு, அவர்களுக்கென்று தனி குணமுண்டு’ என்ற வரிகளுக்கேற்ப தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் உலகம் மெச்சும் பண்புகளை பெற்றுள்ளது. பண்டைய தமிழர்களின் கலாச்சாரத்தை இன்றைய தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகிற்கே பறைசாற்றுபவை நினைவுச் சின்னங்கள். அவை முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.



கோவையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதிமலையில் இருக்கும் குகை ஓவியங்கள் பாதுகாக்கப்படாத நிலையில் இருப்பது தமிழர்களிடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.



கோவை மாவட்டத்தில் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது குமிட்டிபதி கிராமம். இந்த கிராமத்தில் பதி மலை என்ற மலைக்குன்று அமைந்துள்ளது. குன்றின் மேற்பகுதியில் முருகன் கோவிலும், கீழ் பகுதியில் பண்டைய தமிழர் வரைந்த குகை ஓவியங்களும் அமைந்துள்ளது.



வெள்ளை நிற மையால் வரையப்பட்டுள்ள இந்த குகை ஓவியங்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டது எனவும், யானையை மனிதன் ஒருவன் இயக்குவதை இந்த ஓவியங்கள் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய கால கட்டத்தில் பதிமலை குன்று பாண்டியர்கள் கல்வி பயிலும் இடமாக இருந்ததாகவும், அதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த மலைக்குன்றை ‘பாண்டியன் பள்ளிக்கூடம்’ என்று அழைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இப்படியான வரலாற்று சிறப்பு மிக்க இடம், சாரியான முறையில் பாதுகாக்கப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. குகை ஓவியங்கள் உள்ள பகுதி முழுவதும் மது பாட்டில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகைதர தயங்குகின்றனர்.

எனவே, அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த வரலாற்று சின்னத்தை மீட்டெடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...