கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரை தமிழக கேரள கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது போலி சிம் கார்டு, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கேரள மற்றும் ஆந்திராவிலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதல் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ள மாவோயிஸ்ட்டு இயக்கத்தினை சேர்ந்த அனூப்பை சந்திக்க கடந்த வாரம் சிறைச்சாலைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மற்றும் சர்மா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் சிறை விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதனைக்கண்டித்து மத்திய சிறையில் உள்ள அனூப் மற்றும் வீரமணி ஆகியோர் மத்திய சிறைசாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.