புரவங்கரா, கோவையை ‘பசுமை கோயம்புத்தூர்’ ஆக மாற்றும் முயற்சியாக ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியை மேற்கொள்கிறது

புரவங்கரா, கோயம்புத்தூர் மாநகரை பசுமையான கோயம்புத்தூர் ஆக மாற்றும் முயற்சியாக, மாபெரும் ‘மரம் நடுதல்’ என்னும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது, செல்வபுரத்தில் அமைந்திருக்கும் ப்ராவிடெண்ட் க்ரீன் பார்க்கில் நடைப்பெற்றது. 



புரவங்கரா மேற்கொண்டிருக்கும் ‘மரம் நடுதல்’ முயற்சியானது, எழில் கொஞ்சும் கோவை நகரின் பழைய அழகையும், இயற்கை சுற்றுப்புறத்தையும் மீட்டெடுக்கும் நல்லெண்ணத்தின் ஒரு சிறிய வெளிப்பாடாகவும், முயற்சியாகவும் அமைந்திருக்கிறது.

‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு முதல்  மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், புரவங்கரா நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆபரேஷன்ஸ், வீரராகவன் கலந்து கொண்டார். ‘மரம் நடுதல்’ முயற்சியைக் குறிப்பிட்டு அவர் பேசுகையில், நம்முடைய எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, நமது சுற்றுச்சூழலை  பாதுகாப்பதிலும், தொடர்ந்து நீடித்து இருக்கக்கூடிய இயற்கைச் சூழலையும் உருவாக்குவதிலும் புரவங்கரா மிகவும் அக்கறையுடனும், அதிக உத்வேகத்துடனும் செயல்பட்டுவருகிறது. அத்தகைய முயற்சியில், இந்த ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சி ஒரு சிறிய அங்கமாகும். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் சமூகத்திற்கு  வளமையையும், வளர்ச்சியையும் அளிக்கும் வகையில் புரவங்கரா தொடர்ந்து தனது பங்கினை நிச்சயம் வழங்கும். இங்கு வசிக்கும் மக்கள் இயற்கை சூழ்ந்த பசுமையான சூழலில் வாழ்வது சாத்தியப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் அவர்களுடைய சுற்றுச்சூழலானது என்றென்றும் இயற்கையுடன் அமைவதில் நாங்கள் பங்கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.



ப்ராவிடெண்ட் பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் ப்ராவிடெண்ட் ஹவுஸிங்கின் பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில் ஒன்றாக கைக்கோர்த்ததன் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...