புரவங்கரா, கோவையை ‘பசுமை கோயம்புத்தூர்’ ஆக மாற்றும் முயற்சியாக ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியை மேற்கொள்கிறது

புரவங்கரா, கோயம்புத்தூர் மாநகரை பசுமையான கோயம்புத்தூர் ஆக மாற்றும் முயற்சியாக, மாபெரும் ‘மரம் நடுதல்’ என்னும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது, செல்வபுரத்தில் அமைந்திருக்கும் ப்ராவிடெண்ட் க்ரீன் பார்க்கில் நடைப்பெற்றது. 



புரவங்கரா மேற்கொண்டிருக்கும் ‘மரம் நடுதல்’ முயற்சியானது, எழில் கொஞ்சும் கோவை நகரின் பழைய அழகையும், இயற்கை சுற்றுப்புறத்தையும் மீட்டெடுக்கும் நல்லெண்ணத்தின் ஒரு சிறிய வெளிப்பாடாகவும், முயற்சியாகவும் அமைந்திருக்கிறது.

‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு முதல்  மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், புரவங்கரா நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆபரேஷன்ஸ், வீரராகவன் கலந்து கொண்டார். ‘மரம் நடுதல்’ முயற்சியைக் குறிப்பிட்டு அவர் பேசுகையில், நம்முடைய எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, நமது சுற்றுச்சூழலை  பாதுகாப்பதிலும், தொடர்ந்து நீடித்து இருக்கக்கூடிய இயற்கைச் சூழலையும் உருவாக்குவதிலும் புரவங்கரா மிகவும் அக்கறையுடனும், அதிக உத்வேகத்துடனும் செயல்பட்டுவருகிறது. அத்தகைய முயற்சியில், இந்த ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சி ஒரு சிறிய அங்கமாகும். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் சமூகத்திற்கு  வளமையையும், வளர்ச்சியையும் அளிக்கும் வகையில் புரவங்கரா தொடர்ந்து தனது பங்கினை நிச்சயம் வழங்கும். இங்கு வசிக்கும் மக்கள் இயற்கை சூழ்ந்த பசுமையான சூழலில் வாழ்வது சாத்தியப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் அவர்களுடைய சுற்றுச்சூழலானது என்றென்றும் இயற்கையுடன் அமைவதில் நாங்கள் பங்கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.



ப்ராவிடெண்ட் பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் ப்ராவிடெண்ட் ஹவுஸிங்கின் பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில் ஒன்றாக கைக்கோர்த்ததன் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...