வங்கி கடன் பெற தவறான ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- நிறுவனங்கள் பதிவாளர் ஜோஸ்குட்டி எச்சரிக்கை

பதிவு செய்யப்பட்ட செயல்படாத நிறுவனங்கள் வங்கி கடன் பெற தவறான ஆவணங்களை தயாரித்து தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி எச்சரித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனங்களின் பதிவாளர் ஜோஸ்குட்டி கூறியதாவது:-

கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பதிவு செய்தும் இருப்புநிலை ஆவணங்களை பதிவு செய்யாமல், செயல்படாமல் உள்ள ஷெல் நிறுவனங்கள் எனப்படும் 5 ஆயிரத்து 766 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் 12 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்படும் இயக்குனர்கள் செயல்பாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் இயக்குனராக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை இதனால் உருவாகும். செயல்படாமல் உள்ள 1500-க்கும் மேற்பட்ட இத்தகைய ஷெல் நிறுவனங்கள் வங்கிகளில் சுமார் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தாமல் இருப்பதால், இத்தகைய வாராக்கடன் மிகப்பெரிய பொருளாதார மோசடியாக கருதப்படும் எனவும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளிக்கப்பட உள்ளது. 

இந்த ஷெல் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, கலால் மற்றும் வணிக வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது அத்துறைகள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான தொகை 36 ஆயிரம் ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டு முழுமையாக இணையம் மூலம் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால் மிக சுலபமாக நிறுவனங்களை பதிவு செய்ய முடியும்" என ஜோஸ்குட்டி தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இத்தகைய செயல்படாமல் இருந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்நிறுவங்கள் மத்திய பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் போது அந்நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...