மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் பேட்டி

கோவை அரசு மருத்துவமனையில் விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ரூபாவிற்கு கடந்த மார்ச் மாதம் கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த பின்னர், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து கோவை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் தாய் சேய் நலத்திட்டத்தின் படி மகப்பேறு பெற்ற பெண்ணின் உடனிருந்த செந்திலின் தாயார் சியாமளாவின் கையெழுத்து பெற்ற பின்னரே  கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் யாருக்கும் கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும், கருத்தடை சாதனம் குறித்து விளக்கி கூறி ஒப்புதல் பெற்றே பொருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனை மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...