கருணாநிதியின் 94 வயதையும், எம்.ஜி.ராமச்சந்திரனின் 100 வயதையும் குறிக்கும் வகையில் தங்க நகைத்தொழிலாளியின் கலைப்படைப்பு

கருணாநிதியின் 94 வயதையும், எம்.ஜி.ராமச்சந்திரனின் 100 வயதையும் குறிக்கும் வகையில் தங்க நகைத்தொழிலாளி சோப்பு, மெழுகு, பென்சிலில் வடித்த சிற்பங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

கோவை தங்க நகை தொழிலாளியான உன்னால் முடியும் ராஜா மைக்ரோ அளவில் தங்கத்தில் கிரிக்கெட் பேட் மற்றும் உலக கோப்பை, தலைவர்களின் சிறிய சிற்பங்களாக செய்வது, சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கருணாநிதி அவர்களின் வைரவிழா நிகழ்வு அண்மையில் சென்னையில் நடத்தப்பட்டது. கருணாநிதியின் தமிழ் தன்னை பிரமிக்க வைப்பதால் அவரது உருவத்தை பென்சிலில் நாற்காலியின் மேல் கருணாநிதி அமர்ந்து கைகாட்டிக் கொண்டிருப்பது போன்றும் அவரது தலைமேல் பேனாமுனை வைத்து அதில் 94 வயது என்று குறிப்பிட்டு அவரது கலையுணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் சிறிய சிற்பமாக உருவாக்கி இருந்தார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது கருணையுள்ளத்தையும், மக்களுக்கு ஆற்றிய சேவையயை நினைவு கூறும் வகையில் குளிக்க பயன்படுத்தும் சோப்பில் எம்.ஜி.ஆரின் உருவத்தை வண்ணம் கொடுத்து வரைந்திருந்தார். வெளிச்சத்தில் காண்பித்தால் எம்.ஜி.ஆரின் கண்ணாடி பிரதிபலிப்பது நன்றாக தெரியும் வண்ணம் வரைந்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர் உருவத்தை மெழுகுச்சிலையில் உருவாக்கி எம்.ஜி.ஆர் 100 என்று எழுத்தில் ஐந்நூறு கிராம் எடையில் உருவாக்கியிருந்தார். பென்சிலில் 400 மில்லி தங்க வர்ணம் பூசப்பட்ட எம்.ஜி.ஆர் உருவத்தை பேன்சில் முனையில் சிறிய அளவில் உருவாக்கி இருந்தார்.

தங்க நகைத்தொழிலாளியாக இருந்தாலும், தனது கலைபடைப்பின் மூலம் பல்வேறு சிற்பங்களையும் ஓவியங்களையும் வரைந்து பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார் யு.எம்.டி ராஜா.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...