பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

கால்நடை மருத்துவர்களுக்கான ஒரே பதவி மற்றும் ஊதியம் என்ற நிலையை மாற்றும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி கால்நடை மருத்துவர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகள் வரை பதவி உயர்வு அற்ற நிலையில் ஒரே பதவியில் பணிபுரியும் நிலையினை மாற்றி அரசு ஆணை 49 ஐ அமுல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2,768 மருத்துவர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 105 கால்நடை மருத்துவமனையில் உள்ள 85 மருத்துவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பணி உயர்வு குறித்து தமிழக அரசு விரிவாக ஆலோசித்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் பதவி உயர்வு பணி இடம் மாறுதல் செய்த ஆணைகளை வழங்கிய நிலையில் கடந்த மே மாதம் வெளியிட்ட அரசு ஆணை   திடீரென காரணம் சொல்லமால் நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட அரசு ஆணையினை  உடனடியாக திரும்ப பெற்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை முன் வைத்து இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

அரசு ஆணை திரும்ப பெறவில்லை என்றால் மாநில குழு கூடி அடுத்த கட்ட போரட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டத்தால் கால்நடை பரமரிப்பில் பாதிக்காத வகையில் சில மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்களை கொண்டு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...