பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மீதான வன்கொடுமைக்கு தீர்வு வழங்க கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 



பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை மற்றும் பணியாளர்கள் மீதான அராஜகம் குறித்து கடந்த 21.5.2017ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் கொடுத்த பணியாளர்களை வாபஸ் வாங்க மிரட்டினர் அது குறித்தும் 28.5.2017ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் எங்கள் சங்கத்தின் தலைவர் ராமன் மீது சஸ்பென்ட் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் நேற்று பேரூராட்சி உதவி இயக்குனரிடம் புகார் தெரிவித்து மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை நடவடிக்கையிலிருந்து விடுவிக்குமாறும், பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராமன் மீது உள்ள சஸ்பென்ட் உத்திரவை திரும்பபெற வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...