அன்னூர் அருகே புதிதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அருகம்பாளையத்தில் புதிதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அருகம்பாளையம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த வாரம் மதுபானக்கடை திறக்கபட்டது. இதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள்அரசு மதுபான கடையை அகற்றகோரி நேற்று முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்களிடம் அன்னூர் வட்டாச்சியர் இருதயராஜ் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த போது, உடன்பாடு ஏற்படாததால் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கடை திறக்கபடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி கடிதம் வழங்க கோரி கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை குன்னத்தூரில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக 20 நிமிடம் கோவை - சத்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...