வாலங்குளம் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகள் வழங்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு


கோவை LGB நகர் ஹைவே காலனி பின்புறம் வாலங்குளம் பகுதியில் அகற்றப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. LGB நகர் பகுதில் இருந்த சுமார் 1௦௦௦ குடிசை வாழ் மக்களை வேறு வீடு தருவதாகவும் வாலங்குளம் பகுதியில் சுத்தம் செய்வதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு மக்களை கட்டாயப்படுத்தி அப்புற படுத்தி உள்ளனர். தற்போது, குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயப்படுத்தி அரசால் வெளியற்றிய பின்னர் அந்த இடம் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குளத்தினில் கட்டிடகழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் குளத்தினில் நடைபாதை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 



ஆனால், அவர்களில் சுமார் 350 குடிசை வாசிகளுக்கு மாற்று வீடு தரப்படவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்த குடிசை வாசி மக்கள் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து குடிசை மாற்று வாரியம் அலுவரை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...