கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்த சோதனை தீவிரம்: உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பேட்டி

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்காளத்தில் பிளாஸ்டிக் அரிசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதில் சமைக்கும் உணவு ரப்பர் போன்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து தெலுங்கானா மாநில உணவுப்பொருள் வழங்குதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

உணவு பொருட்களில் பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படுவதால், செரிமானக் கோளாறு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். மேலும், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். ஆனால், ‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று’ உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். இருந்த போதும், தமிழக மக்கள் பிளாஸ்டிக் அரிசியால் அச்சம் கொண்டுள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மளிகை கடைகளில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் 485 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக 9444042322 என்ற என்னிக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:- பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக கடந்த 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகிறோம். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி மண்டிகள், மளிகை கடைகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 29 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 16 இடங்களில் இருந்து அரசி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். கோவையில், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்டிக் அரசிகள் எதுவும் சிக்கவில்லை. பொதுவாக தமிழகத்தில் அரசி உற்பத்தி மிக அதிகம், அதனால் இங்கு பிளாஸ்டிக் அரசி வருவதற்கு வாய்ப்பு இல்லை. கோவைக்கு காங்கேயம் போன்ற பல பகுதிகளில் இருந்து அதிகப்படியான அரிசி கிடைக்கிறது. தேவைக்கும் அதிகமான அளவில் இங்கு அரிசி இருப்பதால் கோவையில் பிளாஸ்டிக் அரிசிக்கு இடமில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எங்களுக்கு புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...