கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மதுரை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து 6 மோப்ப நாய்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

இதில் 2 மோப்ப நாய்கள் வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும், 4 நாய்கள் கொலை, கொள்ளை குறித்து துப்பறியும் வகையில் பயிற்சி பெற்றன.
பயிற்சிகாலம் முடிந்த நிலையில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த நாய்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றன. முன்னதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மோப்ப நாய்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.