நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு


கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிவில் பொறியாளர் மற்றும் கட்டிடம் சர்வேயர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.கனகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை நஞ்சுண்டாபுரம் வார்டு எண் 75, கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள பார்ஷன் சேஷ் நெஷ்ட்லே அடுக்குமாடி குடியிருப்பு நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. 



இப்பகுதியில், நீர்நிலை இருந்ததற்கான சான்றாக மாவட்ட நிர்வாகம் ஆவண எண் 149/2பி குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ஷன் அடுக்குமாடி குடியிருப்பில் எண் 10 கட்டிடமே இந்த நீர்நிலையினை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகில் ஒரு வணிக வளாகமும் நீர்நிலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளினால் ஒரு நீர்நிலையே மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.கனகசுந்தரம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...