மே 17 இயக்கத்தினரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கக் கோரி அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்


மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் முன்பாக இருந்து ஊர்வலமாக சென்று, அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு வர்ணாசிரம கொள்கைகளை திணிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைப் சேர்ந்த ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 17 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...