மே 17 இயக்கத்தினரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கக் கோரி அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்


மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் முன்பாக இருந்து ஊர்வலமாக சென்று, அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு வர்ணாசிரம கொள்கைகளை திணிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைப் சேர்ந்த ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 17 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...