குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதி மக்களுக்கு குலுக்கல் முறையில் வீடு

கோவை மாநகரத்தில், குளம் மற்றும் நீர்வழித்தட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாநகரத்தில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், கோவையில் உக்கடம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, வெள்ளலூர் குறிச்சி மலை, கோவைபுதூர் அண்ணாநகர், மலைநகர் ஆகிய இடங்களில், எட்டாயிரத்துக்கும் அதிகமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. குறிச்சி குளம், வெள்ளலூர் ராஜவாய்க்கால், சங்கனூர் பள்ளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு மே 3 ஆம் தேதியன்று (நாளை) குலுக்கல் முறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒத்துக்கப்படுகின்றன.

அதன்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு குடிசை மாற்று வாரியம் மூலமாக, வெள்ளலூரில் 2,186, மலுமிச்சம்பட்டியில் 1,460, மதுக்கரை அண்ணாநகர் 960, மலைநகரில் 224 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 1,750 பேர் வசிப்பது உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு நாளை (மே 3) குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக மற்ற நீர்நிலைகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கும் வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...