உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை அதிகப் படித்திய மத்திய அரசைக் கணடித்து வணிகர் சங்கத்தின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அறிவிப்பில், சிறிய உணவகங்களுக்கு 5 சதவிகிதம் வரியும், நடுத்தர ஏசி அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிப்பும், ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகிதமும் வரி விதித்துள்ளது.
முந்தைய காலத்தைவிட கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள இந்தவரி விதிப்பால், உணவகங்களுக்கு வரும் பொது மக்களை பாதிக்க கூடிய நிலை உள்ளது. எனவே புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடியிருக்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல தமிழகம் முழுவதும் மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இணையத்தின் மூலம் விற்பனை செய்வதை கண்டித்தும், மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே வரி என்கின்ற முறையில் மாறுதல் செய்து வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 300 ரெஸ்டாரண்டுகளும், 1200 பேக்கரிகளும், பல ஆயிரக்கணக்கான மருந்து விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தமாதம் மீண்டும் ஜிஎஸ்டி மீதான விவாதத்தின் போது அதிகரிக்கப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அறிவிப்பில், சிறிய உணவகங்களுக்கு 5 சதவிகிதம் வரியும், நடுத்தர ஏசி அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிப்பும், ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகிதமும் வரி விதித்துள்ளது.
முந்தைய காலத்தைவிட கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள இந்தவரி விதிப்பால், உணவகங்களுக்கு வரும் பொது மக்களை பாதிக்க கூடிய நிலை உள்ளது. எனவே புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடியிருக்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல தமிழகம் முழுவதும் மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இணையத்தின் மூலம் விற்பனை செய்வதை கண்டித்தும், மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே வரி என்கின்ற முறையில் மாறுதல் செய்து வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 300 ரெஸ்டாரண்டுகளும், 1200 பேக்கரிகளும், பல ஆயிரக்கணக்கான மருந்து விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தமாதம் மீண்டும் ஜிஎஸ்டி மீதான விவாதத்தின் போது அதிகரிக்கப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.