உணவு பொருள் மீது ஜிஎஸ்டி வரியை அதிகரித்த மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை அதிகப் படித்திய மத்திய அரசைக் கணடித்து வணிகர் சங்கத்தின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அறிவிப்பில், சிறிய உணவகங்களுக்கு 5 சதவிகிதம் வரியும், நடுத்தர ஏசி அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிப்பும், ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகிதமும் வரி விதித்துள்ளது.

முந்தைய காலத்தைவிட கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள இந்தவரி விதிப்பால், உணவகங்களுக்கு வரும் பொது மக்களை பாதிக்க கூடிய நிலை உள்ளது. எனவே புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடியிருக்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல தமிழகம் முழுவதும் மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இணையத்தின் மூலம் விற்பனை செய்வதை கண்டித்தும், மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே வரி என்கின்ற முறையில் மாறுதல் செய்து வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 300 ரெஸ்டாரண்டுகளும், 1200 பேக்கரிகளும், பல ஆயிரக்கணக்கான மருந்து விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தமாதம் மீண்டும் ஜிஎஸ்டி மீதான விவாதத்தின் போது அதிகரிக்கப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...