தமிழக முதலமைச்சருக்கு வல்லார கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகள் அனுப்பி தமிழ் புலிகள் அமைப்பினர் நூதன போராட்டம்


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி முடித்தது உள்ளிட்டு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் மறந்து அதிகமாக கட்சி செயல்பாடுகளில் மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை நினைவுகூறும் வகையிலும் தமிழக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் ஞாபக சக்திகளை அதிகரிக்கும் மாத்திரைகளை அஞ்சல் மூலம் அனுப்பும் போராட்டத்தில் இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அஞ்சல் நிலையத்திற்கு முதலமைச்சருக்கு அனுப்ப வல்லாரை கீரை, வெண்டைக்காய், மாத்திரைகள் உள்ளிட்டவற்றை தமிழ் புலிகள் அமைப்பினர் கொண்டுவந்தனர். அப்பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், போலி டாஸ்மாக் கடைகள், பள்ளி கல்வி துறையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தற்போது உள்ள நிலையில் தமிழக அரசு மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தும் விதமாக தமிழ் புலிகள் சார்பில் வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகளை அனுப்பி வைக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...