ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது தற்காலிகமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும்.

ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017 ஆம் கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த மே 15ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்ய எலக்ட்ரீசியன், எம்எம்வி, பொருத்துனர், மின்சார கம்பி செலுத்துபவர், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விபரங்கள் நேரடியாக 2017 மே 31 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனை செய்திட இயலாத விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட தக்கவழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசால் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு கட்டணங்கள் முற்றிலும் இலவசம். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மேலும், பயிற்சி பெரும் அனைவருக்கும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்படுகிறது. 

இதற்கான கல்வித் தகுதி தொழிற் பிரிவுகளைப் பொறுத்து 8-ஆம், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம் 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை). அனைத்து பயிற்சியாளர்களுக்கும் என்ஐஎம்ஐ புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9942730555, 8940837678, 9894783226 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...