ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது தற்காலிகமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும்.

ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017 ஆம் கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த மே 15ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்ய எலக்ட்ரீசியன், எம்எம்வி, பொருத்துனர், மின்சார கம்பி செலுத்துபவர், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விபரங்கள் நேரடியாக 2017 மே 31 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனை செய்திட இயலாத விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட தக்கவழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசால் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு கட்டணங்கள் முற்றிலும் இலவசம். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மேலும், பயிற்சி பெரும் அனைவருக்கும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்படுகிறது. 

இதற்கான கல்வித் தகுதி தொழிற் பிரிவுகளைப் பொறுத்து 8-ஆம், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம் 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை). அனைத்து பயிற்சியாளர்களுக்கும் என்ஐஎம்ஐ புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9942730555, 8940837678, 9894783226 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...