வால்பாறையில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோரும் நடைபெரும் கோடை விழா


கோவை மாவட்டத்தின் கோடை வசந்ததலமாக வால்பாறை இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பிர மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து இயற்கை சூழலை ரசித்து செல்வார்கள். அரசு சார்பக ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று காலை துவங்கியது.



விழாவை ஒட்டி தோட்டக்கலை துறை சார்பாக 12,000 கொய் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட கங்காரு மற்றும் ஒட்டகமும், 100 கிலோ காய்கறிகளால் செய்யப்பட்ட பறக்கும் குதிரையும், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. வனத்துறை அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. டான் டீ, ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறை, சுகாதார துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, ஆவின் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் வரவேற்றார், தோட்டக்கலை துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் விஜயகுமார், வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் நகராட்சி பொறியளர் ராஜகோபால் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் அரசுதுறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 



தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் மூலனூர் மின்னல் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும் மற்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில் நுன்னரிவு மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அரசு ஆண்கள் மேல் நிலப்பள்ளி, வால்பாறை, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வால்பாறை தூய இருதய மேல் நிலைப்பள்ளி, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 



இவ்விழாவானது ஆண்டுதோரும் மே கடைசி வாரத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால் இவ்விழாவானது வருடம் தோரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் கோடைவிழா நடைபெறும் நாட்களை முன்னதாகவே மக்களுக்கு தெரிவித்தால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

இன்று மாலை நிறைவு பெரும் இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...