வால்பாறையில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோரும் நடைபெரும் கோடை விழா


கோவை மாவட்டத்தின் கோடை வசந்ததலமாக வால்பாறை இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பிர மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து இயற்கை சூழலை ரசித்து செல்வார்கள். அரசு சார்பக ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று காலை துவங்கியது.



விழாவை ஒட்டி தோட்டக்கலை துறை சார்பாக 12,000 கொய் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட கங்காரு மற்றும் ஒட்டகமும், 100 கிலோ காய்கறிகளால் செய்யப்பட்ட பறக்கும் குதிரையும், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. வனத்துறை அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. டான் டீ, ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறை, சுகாதார துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, ஆவின் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் வரவேற்றார், தோட்டக்கலை துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் விஜயகுமார், வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் நகராட்சி பொறியளர் ராஜகோபால் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் அரசுதுறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 



தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் மூலனூர் மின்னல் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும் மற்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில் நுன்னரிவு மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அரசு ஆண்கள் மேல் நிலப்பள்ளி, வால்பாறை, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வால்பாறை தூய இருதய மேல் நிலைப்பள்ளி, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 



இவ்விழாவானது ஆண்டுதோரும் மே கடைசி வாரத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால் இவ்விழாவானது வருடம் தோரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் கோடைவிழா நடைபெறும் நாட்களை முன்னதாகவே மக்களுக்கு தெரிவித்தால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

இன்று மாலை நிறைவு பெரும் இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...