ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது - தங்க நகை உற்பத்தியாளர்கள் கேரிக்கை

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்க்கு 1.25 சதவிகிதத்திற்கும் மேல் வரி விதிக்கக் கூடாது என கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் வணிகவரித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக தொழிற்துறை சார்ந்தவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக சபை உள்ளிட்ட தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், இந்தியாவிலேயே தங்க நகை உற்பத்தி பெருநகரங்களில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிகளவு தங்க நகை உற்பத்தி தொழிலாளர்களும் கோவையில் உள்ளனர்.

இது வரை ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்திக்கு வரி குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் 4 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. இவ்வாறு 4 சதவிகிதம் வரி விதித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது எனவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வணிக வரித்துறை இணை ஆணையர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்துள்ளோம். தங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும்" இவ்வாறு தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...