ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது - தங்க நகை உற்பத்தியாளர்கள் கேரிக்கை

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்க்கு 1.25 சதவிகிதத்திற்கும் மேல் வரி விதிக்கக் கூடாது என கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் வணிகவரித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக தொழிற்துறை சார்ந்தவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக சபை உள்ளிட்ட தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், இந்தியாவிலேயே தங்க நகை உற்பத்தி பெருநகரங்களில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிகளவு தங்க நகை உற்பத்தி தொழிலாளர்களும் கோவையில் உள்ளனர்.

இது வரை ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்திக்கு வரி குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் 4 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. இவ்வாறு 4 சதவிகிதம் வரி விதித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது எனவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வணிக வரித்துறை இணை ஆணையர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்துள்ளோம். தங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும்" இவ்வாறு தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...