இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்.


இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து போத்துனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

 

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய காரணங்களுக்கான மாடுகளை விற்க, வாங்க புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ள மத்திய அரசு மிருகவதைக்கு எதிராகவும் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து, எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் புதிய விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது., அதில் குறிப்பாக கால்நடைகள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் போது துன்புறுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் போத்தனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாட்டின் தோலை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசு, ஜனநாயக நாட்டில் மாட்டிறைச்சி உணவு உண்ணுவதற்கு தடை விதிப்பதை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...