குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்- மெத்தனம் காட்டும் மாநகராட்சி ஊழியர்கள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக குறிப்பாக கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீரை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவிப்பு விடுத்து வருகிறது. ஆனால், மாநகராட்சியின் தண்ணீர் விநியோகக் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



கோவை மாநகராட்சி, காந்திபுரம் வார்டு எண் 52-க்கு உட்பட்ட நூறடி சாலை எண்- 1 வீதி தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யும் பாதாள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஒடி வருகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரு வேளையில் சப்பை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இங்கு நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த வார்டுக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் தொடர்புகொண்டு புகார் அளித்தும் இன்று வரை இப்பிரச்சனையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

தண்ணீரை வீணடிக்க வேண்டாம் என்று அறிவிப்பு விட்டு, தண்ணீரை வீணடிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...