குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்- மெத்தனம் காட்டும் மாநகராட்சி ஊழியர்கள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக குறிப்பாக கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீரை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவிப்பு விடுத்து வருகிறது. ஆனால், மாநகராட்சியின் தண்ணீர் விநியோகக் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



கோவை மாநகராட்சி, காந்திபுரம் வார்டு எண் 52-க்கு உட்பட்ட நூறடி சாலை எண்- 1 வீதி தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யும் பாதாள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஒடி வருகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரு வேளையில் சப்பை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இங்கு நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த வார்டுக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் தொடர்புகொண்டு புகார் அளித்தும் இன்று வரை இப்பிரச்சனையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

தண்ணீரை வீணடிக்க வேண்டாம் என்று அறிவிப்பு விட்டு, தண்ணீரை வீணடிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...