நகை பட்டறை ஊழியரை கத்தியால் குத்தி ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளை: கோவையில் துணிகரம்


கோவை கெம்பட்டி காலணி பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் வீதியில் தங்க நகைபட்டறை நடத்தி வருபவர் குணசேகரன். இந்த நகை பட்டறையில் நாகராஜ் மற்றும் சரவணன் ஆகிய இருவர் நேற்று இரவு பணியில் இருந்தனர். இன்று அதிகாலை சரவணக்குமார் கடைக்கு சென்ற நேரத்தில் நகை பட்டறைக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய்பொடி தூவினர். மேலும், அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த நாகராஜ் அலறித்துடித்தார். அப்போது, நகை பட்டறையில் இருந்த 1.5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

கடைக்கு சென்றுவிட்டு நகை பட்டறைக்கு திரும்பிய சரவணகுமார் இரத்த வெள்ளத்தில் இருந்த நாகராஜை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், நகை கொள்ளை போன சம்பவத்தை அறிந்து, பெரிய கடை வீதி போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...