நகை பட்டறை ஊழியரை கத்தியால் குத்தி ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளை: கோவையில் துணிகரம்


கோவை கெம்பட்டி காலணி பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் வீதியில் தங்க நகைபட்டறை நடத்தி வருபவர் குணசேகரன். இந்த நகை பட்டறையில் நாகராஜ் மற்றும் சரவணன் ஆகிய இருவர் நேற்று இரவு பணியில் இருந்தனர். இன்று அதிகாலை சரவணக்குமார் கடைக்கு சென்ற நேரத்தில் நகை பட்டறைக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய்பொடி தூவினர். மேலும், அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த நாகராஜ் அலறித்துடித்தார். அப்போது, நகை பட்டறையில் இருந்த 1.5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

கடைக்கு சென்றுவிட்டு நகை பட்டறைக்கு திரும்பிய சரவணகுமார் இரத்த வெள்ளத்தில் இருந்த நாகராஜை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், நகை கொள்ளை போன சம்பவத்தை அறிந்து, பெரிய கடை வீதி போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...