தமிழர்களை இழிவுபடுத்தியதாக புகார் - ரஜினிகாந்த் கொடும்பாவி எரிப்பு.


நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.

ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் பலர் இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக போய்விட்டார்கள் என தமிழர்களை இழிவுபடுத்தியதாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழர்களை இழிவுபடுத்தி ரஜினிகாந்த் பேசியதை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் பதிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடி, கொடும்பாவியை எரித்து போராடட்ம் நடத்தினர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதை தாங்கி கொள்ளமுடியாமல், ஒட்டு மொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ரஜினி பேசியிருப்பதாக அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார்.

தமிழ் மக்கள் என்னை வாழவைத்தவர்கள் என பேசும் ரஜினி தமிழர்களை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது எனவும், தனது திரைப்படங்கள் வெளியிடும் போது எல்லாம் அரசியலுக்கு வருவதாக நாடகம் ஆடுவதாக கூறிய அவர், ரஜினிகாந்த் இந்த பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...