அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் - காவல் ஆய்வாளர் தென்னரசு வேண்டுகோள்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் முழுநிலவு விழிப்புணர்வுக் கூட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாய்க்கனூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு பயிற்சி மைய தன்னார்வலர் பயிற்றுனர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார். கோடாங்கி பட்டி ஊராட்சி பொறியாளர் முத்துக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆழியார் துணை காவல் ஆய்வாளர்கள் டி.தென்னரசு, சின்னசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பின், ஆழியார் துணை காவல் ஆய்வாளர் டி.தென்னரசு பேசும் போது, கிராமப்புறங்களில் குழந்தைகள் சரிவர படிக்கவில்லை என்றால் வீட்டு வேலைகளுக்கு,  தோட்டம், பன்னையத்து வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.

கல்வி அறிவு பெறாத குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் தொழிலையே செய்யக் கூடிய சூழல் உருவாகிறது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் குடும்ப சூழலை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதால் ஒரு தலை முறையை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன், களப் பணியாளர் சரோஜா உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நிகழ்ச்சி மேலாளர் ஜே.இ.பீஜீ அலெக்ஸ் நன்றி கூறினார்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...