கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழாவில் 351 மாணவர்களுக்கு பட்டங்கள்

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 351 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 14 மாணவர்கள் தங்க மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்றனர். UPS இந்தியா Dr. சுப்ரமணி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கற்பகம் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சேக்கிழார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 351 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.






இதில் 7 பட்டதாரிகளுக்கு தங்க பதக்கமும், 7 பட்டதாரிகளுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டு அவர்களின் கல்வி சாதனைகள் கௌரவிக்கப்பட்டன. விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் தலைமை தாங்கினார்.




விழாவின் சிறப்பு விருந்தினராக UPS இந்தியா டெக்னாலஜி சென்டர் நிறுவனத்தின் துணைத் தலைவர் Dr. சுப்ரமணி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் K. முருகையா மற்றும் கல்லூரி முதல்வர் Dr. P. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




இவ்விழாவில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர். பட்டதாரிகள் தங்களின் கல்வி பயணத்தின் மைல்கல்லை கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...