கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் 100-க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
Coimbatore: கோவை மாநகர போத்தனூர் காவல் நிலையம் சார்பில் காவல்துறையினரின் உடல்நலம் மற்றும் பார்வைத்திறன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Aalaya Eye Care மற்றும் Agarwal Eye Hospital இணைந்து நடத்திய இந்த முகாம் லஷ்மி மஹாலில் நடைபெற்றது. முகாமை காவல் ஆய்வாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, காவல்துறையினரின் உடல்நல பாதுகாப்பு மற்றும் கண் பார்வை பராமரிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

முகாமில் முழுமையான கண் பரிசோதனை, பார்வைத்திறன் மதிப்பீடு, கண் அழுத்த பரிசோதனை, கண் உலர்வு பரிசோதனை மற்றும் பார்வை குறைபாடுகள் கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் நீண்ட நேர கணினி பயன்பாடு மற்றும் இரவு ரோந்து பணிகளின்போது கண்களை பாதுகாப்பது தொடர்பாக மருத்துவர்கள் விழிப்புணர்வு ஆலோசனைகளையும் வழங்கினர். தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை மற்றும் கண்ணாடி பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Aalaya Eye Care மற்றும் Agarwal Eye Hospital இணைந்து நடத்திய இந்த முகாம் லஷ்மி மஹாலில் நடைபெற்றது. முகாமை காவல் ஆய்வாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, காவல்துறையினரின் உடல்நல பாதுகாப்பு மற்றும் கண் பார்வை பராமரிப்பின் அவசியம் குறித்து பேசினார்.
முகாமில் முழுமையான கண் பரிசோதனை, பார்வைத்திறன் மதிப்பீடு, கண் அழுத்த பரிசோதனை, கண் உலர்வு பரிசோதனை மற்றும் பார்வை குறைபாடுகள் கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் நீண்ட நேர கணினி பயன்பாடு மற்றும் இரவு ரோந்து பணிகளின்போது கண்களை பாதுகாப்பது தொடர்பாக மருத்துவர்கள் விழிப்புணர்வு ஆலோசனைகளையும் வழங்கினர். தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை மற்றும் கண்ணாடி பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.