கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச வழக்குகள், வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து, சொத்து தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும். நீதிமன்ற கட்டணம் திருப்பி வழங்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.




கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை மற்றும் அன்னூர் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் இந்த மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இதில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரிக்கப்படும்.




மேலும், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துகொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துகொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.




நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடன் வசூல் வழக்குகளுக்கும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும். இதுபோன்ற வழக்குகளுக்கு தீர்வு எட்ட, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் டிசம்பர் 1ம் தேதி முதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.




இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...