பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பயந்த மக்கள் மரங்களில் ஏறி தப்பிய நிலையில், இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்று சாலைகளில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.

அந்த பகுதியில் இருந்த சில வாலிபர்கள், காளையை பார்த்து மரத்தின் மீது ஏறி அதன்மீது கல் மற்றும் சில பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளை அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளது.

பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காளை சாலைகளில் வேகமாக அங்கும் இங்கும் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வாளாங்குளம் குளக்கரையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் காளை பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, காளையின் உரிமையாளர் யார், கயிறு அவிழ்த்து தானாக வந்ததா அல்லது யாராவது காளையை அங்கு விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் காங்கேயம் காளை திடீரென ஆக்ரோஷமாக நடந்து பொதுமக்களை விரட்டிய சம்பவம் காரணமாக உக்கடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...