கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கலெக்டர் பவன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) கோவை தடாகம் சாலையில் உள்ள GCT கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இங்கு வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு வலுவாக பேணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திடீரென்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். திடீர் ஆய்வின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த நபர்களின் அடையாள அட்டைகளை கலெக்டர் நேரில் பரிசோதனை செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்த பின்னர், கலெக்டர் அங்கிருந்து வெளியேறினார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இத்தகைய திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
இங்கு வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு வலுவாக பேணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திடீரென்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். திடீர் ஆய்வின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த நபர்களின் அடையாள அட்டைகளை கலெக்டர் நேரில் பரிசோதனை செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்த பின்னர், கலெக்டர் அங்கிருந்து வெளியேறினார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இத்தகைய திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.