தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து நீராடி மகிழ்ந்தனர். 39 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற்றனர்.


Coimbatore: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி நடைபெற்ற நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத்தலம் ஒரு நாள் மூடப்பட்டிருந்தது. Coimbatore மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த இடம், தேர்தல் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்கள் வரவால் களைகட்டியது.

Coimbatore மக்கள் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில மக்களும் கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் நீராடி மகிழ்ந்தனர். இங்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாவுக்கு வந்த பொதுமக்களின் உடமைகள் வனத்துறையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Coimbatore நகரில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் குடும்பத்தினருடன் நீராடி பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். கடும் வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற குளிர்ந்த நீரில் நீராடுவது இனிமையான அனுபவமாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

நீர் வரத்து குறைவாக இருந்தபோதிலும், வெப்பத்தை தணிக்கும் வகையில் நீராடியதும், வனபகுதிக்குள் டிரெக்கிங் சென்றதும் நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்காணித்தனர்.

தேர்தல் நாளன்று மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலம் மீண்டும் திறக்கப்பட்டதும், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து பெரும் கூட்டம் குவிந்தது. குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...