குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி புகார் அளித்துள்ளார். விஜய்யின் பேச்சைக் கேட்ட குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம் பிடித்துத் தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு, குழந்தைகளின் உளவியலைப் பாதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Coimbatore கணபதி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன், Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக ஒரு புகார் மனுவை இன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், "விஜய்யின் பேச்சைக் கேட்ட எனது 5 வயது மகன், அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று என்னிடம் அடம்பிடித்தான். நான் மறுப்பு தெரிவித்தபோது, அவன் உணவைத் தவிர்த்து அழுதுகொண்டே பிடிவாதம் பிடித்தான்" என்று தெரிவித்துள்ளார்.

"இறுதியில், தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தான் ஓட்டு போட்டேன் என்று எனது மகனிடம் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. 'விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்' என அவன் அழுது வருவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது" என்று பாலகிருஷ்ணன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் பிஞ்சு மனதில் இத்தகைய எண்ணங்களை விதைப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதலில் ஈடுபட்ட விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விஜய் பேசிய அந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் பாலகிருஷ்ணன் தனது மனுவில் எச்சரித்துள்ளார். விஜய்யின் இந்தப் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...