மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்களின் விலை 10சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூர் குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (COSMAFAN) தலைவர் சிவசண்முககுமார் கூறும் போது,

சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது.

கடந்த 45 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வார்ப்பட ( Foundry) தொழிலின் வளர்ச்சிக்காக காஸ்மாபேன் சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு மற்றும் சிறு பவுண்டரிகள் உறுப்பினர்களாக உள்ளன. இத்தொழில் மூலம் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக பவுண்டரி தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் வரையிலும், இதர துணைப் பொருட்களின் (Allied Materials) விலை 20% முதல் 40சதவீதம் வரையிலும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சீரற்ற விலை ஏற்றத்தினால் சிறு மற்றும் குறு பவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் 'காஸ்டிங்' (Casting) பொருட்களின் விலையை, தற்போதுள்ள விலையிலிருந்து 10 சதவீதம் உயர்த்துவது எனச் சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பவுண்டரி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசூர் மற்றும் மாணிக்கம்பாளையம் பவுண்டரி கிளஸ்டர்களில் அரசு சார்பில் 'மூலப்பொருள் வங்கி' (Raw Material Bank) அமைத்துத் தர வேண்டும். குறு பவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி (GST) வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பவுண்டரி தொழிலையும் பாதுகாக்க முடியும்.

என்றார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...