திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது

திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையத்தில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து மூன்று நாட்களாக தண்ணீர் வீணாகிறது. உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நான்காவதாக மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையம் பகுதியில் இத்திட்டத்தின் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக இந்த நிலை தொடர்வதால், அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களை சிக்கனமாக தண்ணீர் பயன்படுத்த வலியுறுத்தும் மாநகராட்சி, இந்த குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...