திருப்பூரில் கனமழை: சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் பாட்டில்கள்

திருப்பூரில் மாலை 3 மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன.


திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூரில் மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பழ வஞ்சிபாளையம், முத்தையன் நகர், பிச்சம்பாளையம், அங்கேரிபாளையம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தாங்களாகவே மழைநீரை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காந்திநகர் அடுத்த ஃபயர் சர்வீஸ் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய நீரும் மழைநீரும் கலந்து அப்பகுதி சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.



இந்த நீரில் ஏராளமான குப்பைகளுடன் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன. இக்காட்சி அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.



அப்பகுதி பொதுமக்கள் வெளியே நின்று குப்பைகள் தங்கள் வீட்டிற்குள் நுழையாதவாறு குச்சிகளை வைத்து தடுத்து மழைநீரில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். இச்சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...