கோவையில் கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நிர்மலா என்ற பெண்ணை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். பின்னர் உரிய நபரிடம் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்த நிர்மலா (41) என்ற பெண், சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நேர்மையான செயலுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி, நிர்மலா தனது தாயார் சாரதாவுடன் பாலசுந்தரம் ரோட்டில் நடைபயிற்சி சென்றபோது, சாலையில் ரூ.50,000 பணக்கட்டு கிடந்ததைக் கண்டார். பணத்தை தேடி யாரும் வராததால், அவர் அந்தப் பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூனிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நிர்மலாவை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். அதே நேரத்தில், பணத்தை இழந்தவரைக் கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செபாஸ்டியன் என்பவர் தான்தான் அந்தப் பணத்தை இழந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினார். இதையடுத்து, நேற்று (அக்டோபர் 15) ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன், நிர்மலாவின் முன்னிலையில் செபாஸ்டியனிடம் பணத்தை ஒப்படைத்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...