திருப்பூரில் மழை நீரில் நிரம்பிய பாதாள சாக்கடையில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீட்பு; வாகனத்தை தேடும் பணி தீவிரம்

திருப்பூரில் கனமழையால் பாதாள சாக்கடை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீட்கப்பட்டார். வாகனத்தை மீட்கும் பணி தொடர்கிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் ஒரே நாளில் 9.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.

நேற்று பெய்த கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது.



பல வஞ்சிபாளையம் ஜெயலலிதா நகர் அருகே உள்ள குடியிருப்பில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.



இதேபோல் முத்தையன் நகர், ஆனந்தா அவன்யூ உள்ளிட்ட பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.



பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் நேற்று இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் திருப்பூர் மாநகரம் முழுவதும் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியை அடுத்த ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகே பாதாள சாக்கடை நிரம்பி மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து சென்றதால் பாதாள சாக்கடையில் மேற்பகுதி உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் சாலையில் சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்வதற்கான பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக செவந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (40) என்பவர் அவ்வழியே வரும்போது சாலையில் பாதாள சாக்கடை உடைபட்டதை அறியாமல் வந்தபோது இருசக்கர வாகனத்துடன் பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தனசேகரனை மீட்டு நிலையில் இருசக்கர வாகனம் 20 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்துள்ளது.



தொடர்ந்து ஜேசிபி வாகனம் மூலம் தண்ணீர் செல்லும் பாதை விரிவுபடுத்தப்பட்டு சாக்கடை நீரும், மழை நீரும் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து வாகனத்தை மீட்டெடுக்கும் பணியில் மாநகராட்சியின் ரெக்கவரி வாகனம் கொண்டுவரப்பட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது‌.



தண்ணீர் அதிக அளவில் இருந்த காரணமாக தேடும் பணி நடைபெற்றது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திமுக தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன், மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார், மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அணில் குமார் உள்ளிட்ட டோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.

தொடர்ந்து பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் யுனிவர்சல் தியேட்டரில் இருந்து மின் மயானம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்து மாநகராட்சி அலுவலர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...