திருப்பூரில் சிலிண்டர் கசிவு: பள்ளி மாணவிக்கு 75 சதவீதம் தீக்காயம்

திருப்பூர் வஞ்சிபாளையத்தில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து. 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) 75 சதவீதம் தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. தந்தைக்கும் காயம்.


திருப்பூர்: திருப்பூர் இடுவாய் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் இன்று காலை சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) மற்றும் அவரது தந்தை ஜீவா (44) தீக்காயமடைந்தனர்.

ஜீவா தனது மனைவி மகாலட்சுமி (36) மற்றும் இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது மகள்கள் ஸ்ரீமதி (13) மற்றும் கௌசல்யா (11) இடுவம்பாளையம் அரசு பள்ளியில் முறையே 8 மற்றும் 6ஆம் வகுப்பு பயின்று வந்தனர்.



காலை வேளையில் வீட்டில் சிலிண்டர் மாற்றும்போது, வாஷர் வழியாக எரிவாயு கசிந்து தீப்பற்றியது. மகாலட்சுமி தனது மகள் ஸ்ரீமதியுடன் வெளியேறினார். ஜீவா உள்ளே சென்று கௌசல்யாவை மீட்டார். இதில் கௌசல்யா மற்றும் ஜீவா தீக்காயமடைந்தனர்.

இருவரும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜீவாவிற்கு கைகளில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கௌசல்யாவிற்கு உடல் முழுவதும் 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

கௌசல்யாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீரபாண்டி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...