கோவையில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

கோவை துடியலூர் அருகே வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.



வடமதுரையில் உள்ள எஸ்.எஸ் கமலேஷ் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கான கூட்டமும், கேஸ் கம்பெனி அருகே உள்ள தாரிகா மஹாலில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, கோவை கூடலூர் நகராட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது.



இந்தக் கூட்டங்களில் கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஓ.கே.சின்ராஜ், கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு கழக வளர்ச்சிப் பணிகள், மக்கள் பணிகள், அடையாள அட்டைகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.என்.ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்தக் கூட்டங்களில் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மீனவர் அணி செயலாளர் ஜெகன், மகளிர் அணி செயலாளர் விமலா, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல் கூட்டத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் ஆனந்தன், டியூகாஸ் முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது கூட்டத்தில் இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், கோவை கூடலூர் நகராட்சி கழகச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகச் செயலாளர் ரகுநாதன், எண்:4 வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ராமதாஸ், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...